மின்சார சபையினர் மரங்களை வெட்டுவதைக் கண்டித்து துறைநீலாவணையில் ஆர்ப்பாட்டம்



(சா.நடனசபேசன்)
மட்டக்களப்பு - துறைநீலாவணைக் கிராமத்தின் பிரதான வீதியின் இருமருங்கிலும் இருந்த மருத மரங்களை இலங்கை மின்சார சபையின் அம்பாறை காரியாலய உத்தியோகத்தர்கள் வெட்டியமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் துறைநீலாவணை பிரதான வீதியினை மறித்து இன்று மதியம் மேற்கொள்ளப்பட்டது.இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
வீதியோரத்தில் இருந்த சுமார் 5 இற்கு மேற்பட்ட மரங்கள் அடியோடு வெட்டிவீழ்த்தப்பட்டு இருப்பதுடன் ஏனைய மரங்களை வெட்டும் போது நாங்கள் அவ்விடத்திற்குச் சென்று மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தினோம்.