காணமல் போன இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரை ஏக்கர் பிரதேசத்தில் வியாழக்கிழமை (17) காணாமல் போன இளைஞன், நேற்று (18) மாலை கிணறு ஒன்றுக்குள் இருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா,  அரை ஏக்கர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 19 வயதான மாலிக் முபாரிஸ் என்ற இளைஞனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இந்த இளைஞன், தான் சாரதியாக தொழில் புரிந்து வந்த முதலாளியின் வீட்டுக் கிணற்றில் இருந்தே, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.