நாளை முதல் மழை காலநிலை அதிகரிக்கும்

நாளைய தினம் (12) முதல் 15ஆம் திகதிவரை நாட்டின் பல பாகங்களில் மழைவீழச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேடமாக வடக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் இந்நிலை அதிகரித்து காணப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இத தொடர்பில் இன்றைய தினம் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று இரவு, கிழக்கு மற்றும் ஊவா, வட மத்திய மகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்.

நாளைய தினம், நாட்டின் பல பாகங்களில் விசேடமாக பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்.

சில இடங்களில் 100 மில்லிமீற்றவர் வரை மழை பெய்யக்கூடும் ஏனைய இடங்களில் 50 முதல் 75 மில்லிமீற்றர் மழைவீழச்சி பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது