சமூர்த்தி கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

சமூர்த்தி கொடுப்பனவுகள் நிறுத்தப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று தெரிவித்துள்ளார்.

சமூர்த்தி கொடுப்பனவுகள் நிறுத்தப்படுவதாக வெளியான தகவலையடுத்து நாட்டின் பல பிரதேசதங்களை சேர்ந்த மக்கள், கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், சமூர்த்தி கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தின்போது, நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சூடான நிலை ஏற்பட்டிருந்தது.

அதனையடுத்து, நாடாளுமன்ற செயற்பாடுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சமூர்த்தி கொடுப்பனவுகள் நிறுத்தப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று தெரிவித்துள்ளார்