மியன்மார் யானை திருமலை வந்தடைந்தது.

(கதிரவன்)

மியன்மார் மக்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட 23 வயதுடைய 8அடி உயரம் கொண்ட 3.5 தொன் நிறையுடய யானை  வெள்ளிக்கிழமை (2017.08.18) மாலை திருகோணமலை  துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

டைனமிக் ஓசன் 18 கப்பல்  மூலம் இது அஸ்ரப் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கண்டி தலதா மாளிகைக்கு  இது கையளிக்கப்ட்டுள்ளது. இதனை அஸ்ரப் துறைமுகத்தில் தியவதநிலமே நிலங்க டிய பண்டார பொறுப்பேற்றுக் கொண்டார்.


புத்தசாசன அமைச்சின் செயலாளர் சந்திர பிரியந்த கலகேயும் கலந்து கொண்டார்.

பௌத்த துறவிகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 1500 பொதிகளும் கொண்டு வரப்பட்டது.