ஆரையம்பதியில் ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா வர்த்தக மற்றும் தகவல் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(கல்லடி சிவகுமார்)

ஆரையம்பதியில் ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா வர்த்தக மற்றும் தகவல் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா வர்த்தக மற்றும் தகவல் நிலையத்துக்கான அடிக்கல் நடும்  நிகழ்வு   நேற்று     இடம் பெற்றது .

கௌரவ  அமைச்சர் ரவூப் ஹக்கீம் ,ஜோன் அமரதுங்க ,கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களும் அடிக்கல் நடும்  நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏராளமான பொது மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க அவர்களால்    அடிக்கல்       நடும்  நிகழ்வு நடாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும் கௌரவ பிரதம மந்திரி ஆரையம்பதிக்கு வருகை தந்தும்,நிகழ்வை ஆரம்பித்து வைக்காமல் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.