வீடு தீப்பற்றியதால் தளபாடங்கள், பாடப்புத்தகங்கள், காணி உறுதி, வங்கிப்புத்தகங்கள் எரிந்து சாம்பல்

(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை விநாயகபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகரம் திருநிறைச்செல்வி என்பவரது வீடு தீப்பற்றி வீட்டுத்தளபாடங்கள், பாடப்புத்தகங்கள், காணி உறுதி, வங்கிப்புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. அயலில் உள்ளவர்கள் தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. ஏனெனில் வீட்டினுள் இருந்த காஸ் சிலின்டர் வெடித்துச் சிதறியதால் தீயை அணைக்க முடியவில்லை என இளைஞர்கள் பற்றி நியுசிற்கு தெரிவித்தனர்.
கல்குடா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மின்னொழுக்கினாலேயே இத் தீவிபத்து ஏற்பட்டதாக முதியோர் ஒருவர் தெரிவித்தார். காஸ் சிலின்டர் வெடித்துச் சிதறியிருந்தும் தெய்வாதீனமாக யாருக்கும் உடற்சேதம் ஏற்படவில்லையென கிராமசேவகர் தெரிவித்தார்.