பெரிய கல்லாற்றில் தையல் பயிற்சிக்கான பொருட்கள் அன்பளிப்பு

(இ.சுதாகரன்)

கிராமிய கைத் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி அவர்களின் ஏற்பாட்டில் ஐ.தே.க. பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தியின் அனுசரணையில் சிறு கைத் தொழிலில் ஈடுபடுகின்ற யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்களை பிரதேச ரீதியாக அமைத்து அதன் மூலமாக போதியளவு பயிற்சிகள் வழங்கப்பட்டு சுயதொழில் முயற்சிகளை மேம்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இத் திட்டமானது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை இமகிழூர் இபெரிய கல்லாறு பிரதேசங்களில் சிறு ஆடைத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது.

தையல் பயிற்சி தொடர்பான போதியளவான பயிற்சிகள் ஆசியரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் சிலிற்றா நிறுவனத்தின் ஏற்பாட்டில் தையல் பயிற்சிக்கான நூல்கட்டை ,துணி , கத்தரிக்கோல் மற்றும் இதர உபகரணங்கள் அண்மையில் பெரிய கல்லாறு சிறு ஆடைத் தொழிற்சாலை நிருவாகத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.