நாட்டின் பல பாகங்களில் மழை - வளிமண்டளவியல் திணைக்களம்

நாட்டின் பல பாகங்களில் இன்றும் (21) மழை பெய்யக்கூடும் வளிமண்டளவியல்  திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழைபெய்யும் எனவும், வடமத்திய மற்றும் யாழ்- மாவட்டத்தில் கூடுதலான மழையினை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் மற்றும் காற்றுடனான  மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.