கடற்சிப்பிகளுடன் லொறியின் சாரதி கைது

கிண்ணியாவிலிருந்து-குளியாப்பிட்டி பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி கடற்சிப்பிகளை ஏற்றிச்சென்ற லொறியின் சாரதி நேற்று இரவு(20) கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் -முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து இலட்சம் ‌‌‌‌‌‌ரூபாய் பெறுமதியான கடற்சிப்பிகளை டிப்பர் லொறியொன்றில் கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கந்தளாய் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைப்பற்றப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்