43வது தேசிய விளையாட்டு போட்டியில் அம்பாரை மாவட்டத்திற்கு முதல் தங்கப் பதக்கம்

43வது விளையாட்டு விழாவின்  கராத்தே போட்டி கடந்த 06,07ஆம் திகதிகளில் கண்டியில் இடம் பெற்றது. இப் போட்டியில் அம்பாரை மாவட்டம் கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த  சௌ.பால்ராஜ் தனி காட்டா போட்டியில் 1ம் இடத்தை பெற்று தங்க பதக்கத்தினை பெற்று கொண்டுள்ளார்.


அத்துடன் இவ் வருடம் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே போட்டியில் தங்க பதக்கத்தினை வென்றவர் என்பதுடன் கடந்த 2016ஆம் ஆண்டு  தேசிய விளையாட்டு விழாவில் தங்க பதக்கத்தினை வென்று சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிட தக்கது.


தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தனது தாயாரையும் பயிற்றுவிப்பாளரான தமது சகோதரர் சௌ.முருகேந்திரன், விளையாட்டு உத்தியோகத்தர் எல்.சுலக்ஷன் அம்பாரை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் பிரதேச செயலாளர் எஸ்.லவநாதன் கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் எம்.மதிவண்ணன் உள்ளிட்டோருக்கு பால்ராஜ் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.