அத்துடன் இவ் வருடம் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே போட்டியில் தங்க பதக்கத்தினை வென்றவர் என்பதுடன் கடந்த 2016ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவில் தங்க பதக்கத்தினை வென்று சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிட தக்கது.
தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தனது தாயாரையும் பயிற்றுவிப்பாளரான தமது சகோதரர் சௌ.முருகேந்திரன், விளையாட்டு உத்தியோகத்தர் எல்.சுலக்ஷன் அம்பாரை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் பிரதேச செயலாளர் எஸ்.லவநாதன் கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் எம்.மதிவண்ணன் உள்ளிட்டோருக்கு பால்ராஜ் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.