5000 ரூபாய் தாள்களை தடை செய்ய முடிவு?

போலி தாள்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக 5000 ரூபாய் தாள்களை தடை செய்வதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

போலி நாணயத்தாள் அச்சிடப்படுவது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் முறைப்பாடு பதிவாகுவதாகவும், ஒரு மாதத்திற்கு நான்கு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேசம் ஏற்றுக் கொண்ட போலி அச்சிடலை தடுக்கும் தொழில்நுட்ப முறை இலங்கையில் பயன்படுத்தப்படாமையினாலேயே இவ்வாறு போலி தாள்கள் அச்சிடும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.