மியன்மார் அரசுக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான மாபெரும் கண்டன அமைதிப் பேரணி.


ரோஹிங்கயா முஸ்லிம் சகோதரர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்து இனச்சுத்திகரிப்பில் ஈடுபடும் மியன்மார் அரசுக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான மாபெரும் கண்டன அமைதிப் பேரணி, நற்பிட்டிமுனை ஜூ ஆ பெரிய பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
ஆங் சாங் சூசியே ஈமானிய உள்ளங்களோடு விளையாடாதே,மியன்மார் அரசே உடனே நிறுத்து உன் ஈனப் படுகொலைகளை முஸ்லிம் நாட்டுத் தலைவர்களே ஒற்றுமை என்ற கயிற்றை பலமாக பற்றி பிடித்து பிரிந்து விடாதீர்கள்,ஆங் சாங் சூசியே  நேபால் பரிசா? கொலைக்கான பரிசா, போன்ற பதாதைகளுடனும் வெனர்களுடனும் பெரும் கோசங்களையிட்டவாறு நற்பிட்டிமுனை ஜூ ஆ பெபெரிய பள்ளிவாசலில் இருந்து நற்பிட்டிமுனை பிரதான முச்சந்தி வரை மாபெரும் பேரணியை தொடர்ந்து,
கல்முனை நற்பிட்டிமுனை முச்சந்தியில் வைத்து கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக நிர்வாக அதிகாரியிடம் இது தொடர்பான மகஜரினை  கையளித்தனர்.