லலித் - அனுஷ ஆகிய இருவரும் சிறைச்சாலை வைத்தியசாலையில்.!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் செய­லாளர் லலித் சந்­திர குமார் வீர­துங்க, தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் நிஷான் பெல்­பிட்ட கோர­ளகே அனுஷ பெல்­பிட்ட ஆகிய  இரு­வ­ரும் இன்று காலை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவருக்கும் மூன்று வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை வி­தித்து கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று தீர்­ப்ப­ளித்­தது.

சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய குறித்த இருவரும் நீரிழிவு நோய் நிலைமையினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது தொலைத்­தொ­டர்­புகள் ஆணைக்­கு­ழு­விற்கு சொந்­த­மான 600 மில்­லியன் ரூபாவை பயன்­ப­டுத்தி நாட­ளா­விய ரீதியில் விகா­ரை­க­ளுக்கு பௌத்த பக்தர்கள் அணியும் வெள்ளை நிற ஆடை­க­ளுக்­கான துணி­யினை (சீல் துணி) விநி­யோ­கித்­தமை தொடர்பில் சட்­டமா அதி­ப­ரினால் 3 குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்­ட­தை­ய­டுத்தே இவ்­வாறு தீர்­ப­ளிக்­கப்­பட்­டது.

கொழும்பு மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி திஹான் குல­துங்க இந்த தீர்ப்பை வழங்­கினார். கடூ­ழிய சிறைத்­தண்­ட­னைக்கு மேல­தி­க­மாக தலா 20 இலட்சம் ரூபாவை அப­ராதம் செலுத்­தவும் தலா 500 இலட்சம் ரூபாவை தொலைத்­தொ­டர்­புகள் ஆணைக்­கு­ழு­விற்கு நட்­ட­ஈ­டாக வழங்­கவும் இதன் போது நீதி­பதி உத்­த­ர­விட்டார்.

நட்­ட­ஈட்டு தொகை­யினை எதிர்­வரும் செப்­டெம்பர் 20 ஆம் திக­திக்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் நீதி­பதி தனது தீர்ப்பில் சுட்­டிக்­காட்­டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 30 ஆம் திகதி மற்றும் 2015 ஜன­வரி மாதம் 5 ஆம் திகதி ஆகிய கால எல்­லைக்குள் கொழும்பு மேல் நீதி­மன்ற அதி­கார பகு­திக்கு உட்­பட்ட பிர­தே­சத்­தி­லுள்ள இலங்கைத் தொலைத்­தொ­டர்­புகள் ஆணைக்­கு­ழு­விற்கு சொந்­த­மான 600 மில்­லியன் ரூபா, 1996 ஆம் ஆண்டில் 27 ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்­புகள் திருத்த சட்­டத்தி விதி­வி­தா­னங்­க­ளுக்கு மாற்­ற­மான முறையில் (ஜனா­தி­பதி செய­லாளர் ) எனும் பெய­ரி­லான இலங்கை வங்கி கிளையில் 7040016 எனும் வங்கி கணக்­கிற்கு சில் துணி­களை பகிர்­வ­தற்­காக வழங்­கி­யமை தொடர்பில் 3 குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் முன்னாள் சட்­டமா அதிபர் யுவ­ஜன ஜவ­கர்லால் ஜன­சுந்­தர விஜய தில­க­வினால் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது.

அதில் பிர­தி­வா­தி­க­ளாக தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் நிஷான பெல்­பிட்ட கோர­ளகே அனுஷ பெல்­பிட்ட, முன்னாள் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் சந்­திர குமார வீர­துங்­கவும் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தனர்.

முதல் பிர­தி­வா­தி­யான அனுஷ பெல்­பிட்­ட­வுக்கு எதி­ரா­கவும் முன்னாள் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் வீர­துங்­க­வுக்கு எதி­ரா­கவும் தண்­டனை சட்­டக்­கோ­வையில் 113 ஆ, 102 , 386 ஆகிய பிரி­வு­களின் கீழும் 1982 ஆம் ஆண்டு 12 இலக்க பொதுச்­சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் 5(1) அத்­தி­யா­யத்தின் கீழும் 3 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன.

அரச பணத்தை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை, அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை, அது தொடர்பில் ஒன்­றி­ணைந்து சதித்­திட்டம் தீட்­டி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் இரு­வ­ருக்கு எதி­ரா­கவும் சுமத்­தப்­பட்­டன. இதில் முதல் 2 குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்­ட­வையும் 2 ஆம் 3 ஆம் குற்­றச்­சாட்டு தொடர்பில் ஜனா­தி­ப­தியின் முன்னாள் செய­லாளர் லலித் வீர­துங்­க­வையும் நீதி­மன்றம் குற்­ற­வா­ளி­க­ளாக கண்­டது.

அத­னை­ய­டுத்து அவ்­வி­ரு­வ­ருக்கும் எதி­ரான தீர்ப்­பினை நீதி­மன்றம் நேற்று அறி­வித்­தது. அதன்­ப­டியே குற்­றா­வா­ளி­க­ளாக காணப்­பட்ட ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் தலா ஒன்­றரை வருட சிறை தண்­டனை வீதம் இரு­வ­ருக்கும் தலா மூன்று வருட கடூ­ழிய சிறைத்­தண்­ண­ட­னையை மேல் நீதி­மன்ற நீதி­பதி திஹான் குல­துங்க அறி­வித்தார்.

அத்­துடன் இரு­வ­ருக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் அப­ராத தொகை­யி­னையும் அவர் விதித்தார். இவற்­றுக்கு மேல­தி­க­மாக தொலைத்­தொ­டர்­புகள் ஆணைக்­கு­ழு­விற்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட நட்டம் தொடர்பில் இருவரும் தலா 50 இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவும் சிறைக்காவலர்களால் பொறுப்பேற்கப்பட்டு கைவிலங்கு அணிவிக்கப்பட்டு சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.