கருக்கலைப்பை சட்ட ரீதியானதாக்குவது குறித்து அமைச்சர் ஜோன் அமரதுங்க கருத்து

கருக்கலைப்பை சட்டரீதியானதாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித்தால் குற்றம் சுமத்தப்பட்ட விடயத்தில் உண்மையில்லையென  அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கருக்கலைப்பை சட்டரீதியானதாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித்தால் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த விடயம் குறித்து, தாம் பிரதமரிடம் வினவியபோது, அவ்வாறானதொரு தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என பிரதமர் தம்மிடம் கூறினார்.

எனினும், தமது வருமானத்தை நோக்கமாகக் கொண்டு சில வைத்தியர்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகின்றனர்” என கூறினார்.