மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா (19.9.2017) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அதிபர் திருமதி இராஜகுமாரி-கனசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபணி, விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்களும், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஷாம், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பொறியியலாளர் ஏ.எம்.எம்.ஹஹீம், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிராந்திய பணிப்பாளர் திருமதி. கிரேஸ் நவரெட்ணராஜாமற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த வருடாந்த பரிசளிப்பு விழாவில் சுமார் 300 இடைநிலை, உயர்தர மாணவிகளுக்கு அதிதிகளால் கேடயங்களும்,சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.