படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் பலி


(க- சரவணன்)

அம்பாறை ஒலுவில்  கடலில்  மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று
வியாழக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார்
தெரிவித்தனர்.

ஒலுவில் 4ஆம் பிரிவைச் சேர்ந்த 44 வயதுடைய சம்சுதீன் பஸீல் என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம், அக்கரைப்பற்று ஆதார
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.