புதிய கல்வி கொள்கைக்கு அமைவாக மீண்டும் நடைமுறைக்கு வரும் 'இன்ஸ்பெக்டர் மேற்பார்வை' கல்விப்பரிசோதகர் முறை)

புதிய கல்வி கொள்கைக்கு அமைவாக 'இன்ஸ்பெக்டர் மேற்பார்வை' (கல்விப்பரிசோதகர் முறை) மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இலங்கையில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக 30 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட கல்விப்பரிசோதகர் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அம்பகமுவ, வெலிஓயா தோட்டம் கீழ் பிரிவிற்கான கொன்கிரீட் வீதி மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு பாவனைக்காக மக்களிடம் கையளிக்கபட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த திட்டத்தின் மூலம் ஊர் ஊராகவும் தோட்டம் தோட்டமாகவும் சென்று பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களை அழைத்து வந்து மீண்டும் அவர்களை பாடசாலைக்கு சேர்க்கும் விஷேட குழுவொன்று நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ளதாக கூறினார்.

இந்த செயற்திட்டத்தின் ஊடாக பாடசாலைக்கு மாணவர்கள் செல்லாத காரணங்கள் இனங் காணப்பட்டு அதற்கான உதவிகளும் மேற்க்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் படித்தவர்களின் கல்வி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் வறுமை மற்றும் வேறு காரணங்களினால் பாடசாலை கல்வியை இடையில் நிறுத்திய சிறார்களை கல்வி கற்க வைப்பதற்காகவும் இந்த வேலைதிட்டம் முன்னெடுக்கபடவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர். ராஜாரம் மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ். விஸ்வநாதன் பனிப்பாளர் எம். கனகராஜ்¸ முன்னனியின் சிரேஷ்ட பிரதி தலைவர் எஸ்.கிருஸ்ணன் முன்னனியின் பிரதி பொது செயலாளர் ஏம் பிரசாந் உட்பட மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.