ஆரையம்பதியில் லொரி மின்கம்பத்துடன் மோதி பாரிய விபத்து


(சசி)
மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் வங்கிக்கு அருகாமையில், கல்முனைப் பிரதான வீதியில் 2017.09.21 வியாழக்கிழமை இன்று காலை 9:15 மணியளவில் மின்கம்பத்துடன் லொரியொன்று மோதுண்டு பாரிய விபத்துக்குள்ளானது. ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்த வண்டியானது மக்கள் வங்கிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியுடன் மோதி பின் மின்கம்பத்துடன் மோதி இறுதியில் தனியாருக்கு செந்தமான காணியின் வேலியில் மோதி நின்றது.

லொரியில் சாரதி உட்பட மூன்று பேர் பயணித்த வேளையில் ஒருவர் மாத்திரம் பாரிய காயங்களுக்கு உள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஹம்பகா மாவட்டத்திலிருந்து அஸ்ரா நிறுவனப் பொதிகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. லொரியில் சிக்குண்ட மோட்டார் வண்டியானது கிரான்குளத்தை சேர்தவருடையதாகும். இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.