மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தரம் ஒன்று மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகத்தேர்வு

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தரம்-1க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளதாக அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டுக்கான தரம்-1 (ஆண்டு-ஒன்று)மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிப்பதற்கான நேர்முகத்தேர்வு (செப்ரெம்பர் மாதம்) எதிர்வரும் கிழமைகளில் (21,22,25,26,27) ஆகிய திகதிகளில்) நடைபெறவுள்ளதாகவும், நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக்கடிதங்கள் தரம் ஒன்றுக்கு அனுமதிப்பதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த திகதிகளில் உரிய நேரத்துக்கு ஆவணங்களின் உண்மைப்பிரதி, நிழல் பிரதிகளுடன் வருகைதருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் தனிப்பட்ட முகவரிக்கு நேர்முகப்பரீட்சைக்குரிய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நேர்முகத்தேர்வுக்கு சுமார் 400 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.