அம்மன் சிலை நீதிமன்றத்தினால் ஆலய நிருவாகசபையினரிடம் ஒப்படைப்பு


(சா.நடனசபேசன்)
கடந்த ஒன்பது வருடங்களாக காணமல் போன நாவிதன்வெளி ஸ்ரீமத்துமாரியம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான அம்மன் சிலை ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் ஆலய நிருவாகசபையினரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் கடந்த 2009.11.12 ஆம் திகதி ஆலயத்தில் இருந்தவாறு காணாமல் போன இந்த அம்மன் சிலையானது கடந்த 10 ஆம்திகதி அதிகாலை ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு அத்தகவலை சவளக்கடைப் பொலிஸாருக்கு வழங்கியமையால் அம்மன் சிலையினை பொலிஸார் நீதிமன்றத்தில் 12 ஆம் திகதி ஆஜர் படுத்தியபோது அச்சிலையினை ஆலய நிருவாகத்திடம் ஒப்படைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.