மட்டக்களப்பு வீதிகளில் அகற்றப்படாது தேங்கும் குப்பைகள்:தொற்றுநோய் அபாயம்!

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட பகுதிகளில் குப்பைகள் உரிய முறையில் அகற்றப்படாமை காரணமாக குப்பைகள் வீதிகளில் தேங்கி கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் சேமிக்கப்படும் குப்பைகளை திருப்பெருந்துறை குப்பை மேட்டுப்பகுதியில் கொட்டுவதற்கு நீதிமன்ற தடை விதித்துள்ளது.

இந்நிலையில் மாநகர சபை எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள குப்பைகளை உரிய முறையில் அகற்றுவதில் பாரிய பிரச்சனை ஏற்ப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.


இதனால் மக்கள் குப்பைகளை வீதிகளில் வீசி வருகின்றனர்.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீதிகளில் அதிக குப்பைகள் காணப்படுகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.

மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ,இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய சுகாதார சீர்கேடும் தொற்று நோய்களும் குறித்த பகுதியில் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயற்படவேண்டும் என பிரதேச வாசிகள் கேட்டுக்கொள்கின்றனர்.