ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மைலம்பாவெளிக் கிராமத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் ஞாயிறு  மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் சந்தேக நபர் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு அவர்கள் வசம் இருந்த ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.