உணவுச் சாலை ஒன்று தீயில் எரிந்து நாசம்

(கதிரவன்)

திருகோணமலை புல்மோட்டை வீதியில் அலஸ்தோட்டம் பிரதேசத்தில் உணவுச் சாலை ஒன்று தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.

இச்சம்வம்  செவ்வாய்க்கிழமை 2017.09.12 பகல் 11.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் கசிவினால் இது ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்வம் பற்றி உப்புவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து இந்த உணவுச்சாலை வியாபாரம் நடைபெற்று வருகின்ற  நிலையில் இச்சம்வம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை அறிந்த திருகோணமலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் வேறு இடங்களுக்கு பரவாமல் தடுத்தனர்.

குறித்த உணவுச்சாலை  மரங்களினாலும், கூரை கிடுகினாலும் அமைக்கப்பட்டு இருந்துள்ளது.