மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி உத்தியோகத்தர்களின் அலுவலகப் பார்வையிடல்


(சசி)
21.09.2017 வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் 50 பேர் ' தேசிய உற்பத்தித்திறன் மற்றும் அலுவலக - 5S நடைமுறை' போன்ற விடயங்களை பிரயோக ரீதியில் அவதானித்து தங்களது அலுவலகத்திலும் அங்கு பின்பற்றும் சிறப்பம்சங்களை பிரயோகிப்பதற்காக ஒருநாள் தரிசிப்பினை மேற்கொண்டு தேசிய ரீதியில் 2ம் இடம் பெற்ற மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தினை பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கைத்துறை, முகத்துவாரம் இந்துக்கல்லுர்ரி மற்றும் கனிஸ்ட வித்தியாலயம் என்பவற்றையும் பார்வையிட்டனர். இந் நிகழ்விற்கு  பட்டிப்பளை 'வேள்ட் விஷன்'  நிறுவனம் அனுசரணை வழங்கியது.