கல்லடி விபத்தில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு விளக்கமறியல்!

கல்லடி பிரதான வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட சாரதியை எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எம்.ஐ.எம்.ரிஸ்வி உத்திரவிட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவத்தில் 3 பேரை காயமடையச்செய்து தப்பியோடிய மாவனல்லையைச் சேர்ந்த சாரதி நேற்று (சனிக்கிழமை) மாலை மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் நீதவான் முன்னலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே மேற்படி விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.