மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு


(ராகுலன் )
மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த புகையிரதத்தில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு திராய்மடு பகுதியை சேர்ந்த தங்கராஜா சதாகரன்(35வயது)என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் புகையிரத ஊழியர்களினால் குறித்த புகையிரதம் மூலம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


இது தொடர்பான விசாரணையை தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.