பாண்டிருப்பில் ஆசிரியையின் வீட்டில் திருட்டு

செ.துஜியந்தன் -

பாண்டிருப்பில் வீடு ஒன்றில் திருட்டுச்; சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாண்டிருப்பு அண்ணா மன்ற வீதியிலுள்ள திருமதி கோ.அருணந்தி ஆசிரியையின் வீட்டிலே இக் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (09) சனிக்கிழமை அதிகாலை வேளையில் சமையல் அறைப்பக்கமாக உள் நுழைந்த திருடன் வீட்டு அறையினுள் மறைவாக துணிகளுடன் கொழுவி வைத்திருந்த. ஒன்பதரைப் பவுண் தாலிக்கொடியையும், அவரது கணவனின் பர்ஸ்சில் இருந்த 41ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளான்.

வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் ஆலயத்திற்குச் சென்று விட்டு வந்து வீட்டு மண்டபத்தில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர் ஆழ்ந்த உறக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் இருந்த சமயமே இத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.