குருமண்வெளியில் பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(செ.துஜியந்தன்)

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் 7மில்லியன் ரூபா செலவில் இவ் வகுப்பறைக்கட்டிடம் அமையவுள்ளது.

அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் ச.நேசராஜா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். முரளிதரன்,  பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஞானராஜா, கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.திரவியராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.