வாழைச்சேனை பிரதேச செயகத்தினால் சிறுவர்தினம் சிறப்பாக கொண்டாட்டம்

                                                   (ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயகத்தினால் சிறுவர்தினம் நேற்று (13) காலை சிறப்பாக நடைபெற்றது. கறுவாக்கேணி சமூகபராமரிப்பு நிலையத்தில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சமூகசேவை உத்தியோகத்தர் அ.நஜீம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான க.ஜெகதீஸ்வரன், எஸ்.விநாயகமூர்த்தி, முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஹாணுகிருஸ்ணா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ரமேஸ் நவசிதனி, சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஜ், உளவளத்துணை உத்தியோகத்தர் திருமதி. சந்திரவேணி, முதியோர் சம்மேளனத் தலைவர் க.நடேசன், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், செயலகப் பிரிவிலுள்ள சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.