தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தால் நடாத்தப்பட்ட சிங்கள மொழி பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வு

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தால் நடாத்தப்பட்ட சிங்கள மொழி பாடநெறியின் (12 நாள்) இறுதி நாள் நிகழ்வு ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் 10.10.2017 அன்று இடம்பெற்றது.

இந்த பாடநெறியில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திணைக்களங்களில் கடமையாற்றும் 80 பேர் பாடநெறியினை பூர்த்தி செய்தனர். பாட நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களினால்  கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் உதவி பணிப்பாளர் K. கோபிநாத், பிரதேச செயலாளர் திருமதி.N. சத்தியானந்தி, உதவி பிரதேச செயலாளர் திருமதி.L.பிரஷாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி R. லதாகரன்  மற்றும் விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.