துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் சித்தி



(சா.நடனசபேசன்)

இவ்வருடம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் இருந்து நான்கு மாணவர்கள் சித்தியடைந்து பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் ஏ. மனோகரன் தெரிவித்தார்.

இதில் த.அபிரா -162 ந.ரட்சாயினி -159 ப.பேருனா -158 ம.அக்ஷயா -157 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

இம்மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர் பூ.இதயகுமார் அவர்களுக்கும் வழிநடாத்திய அதிபர் ஏ.மனோகரன் அவர்களுக்கும் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்