பாண்டிருப்பில் தீபாவளி விசேட பூசை வழிபாடு

(செ.துஜியந்தன்)

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்ஆலயத்தில் தீபாவளி விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.சபாரெத்தினம் குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட பூசையில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டில் நிரந்தர அமைதியும் தமிழ் மக்களின் இன்னல்கள் அகன்று அவர்கள் வாழ்வில் ஒளிபிறக்கவேண்டும் என விசேட பூசைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.