தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தும் பயிற்சி வகுப்பு

(எஸ்.நவா)

பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தில்; நடைபெற்று வரும் 75க்கு மேற்பட்ட அதிபர் ஆசிரியர்களுக்கான  தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நெறியானது 04.10.2017 ஆரம்பிக்கப்பட்டு 15.10.2017 வரை 12 நாட்கள் (100) மணித்தியாலம் இப்பயிற்சி வகுப்பு இடம்பெற்று வருகின்றது.

இப் பயிற்சியின் ஆரம்ப நிகழ்வில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் திரு கே.கோபிநாத் அவர்களும்  செயலாளர் சீ.அருநாதேவா அவர்களும் மற்றும் வெல்லாவெளி வவுனதீவு பிரதேச செயலகத்தில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணைப்பாளர்கள் செல்வி.கௌசலியா-குலதுங்க டிலினி-சதுமாலி வளவாளர்களான முருகேசபிள்ளை-மாணிக்கவாசகம் அனுசிகா-லக்சனி இராசதுரை-தீபராசா ஆகியோர்களினால் இப்பயிற்சி இடம்பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.