ஆசிரியர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயற்பாடுகள் தொடர்பான வலுவூட்டல் செயலமர்வு



(சா.நடனசபேசன்)

கிழக்குமாகாண கல்வித்திணைக்களமும்  சர்வதேச தொழில் ஸ்தாபனமும் இணைந்து  ஆசிரியர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயற்பாடுகள் தொடர்பான வலுவூட்டல் செயலமர்வு 14,15 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருதினங்கள்  நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் மூலம் கல்முனை பரடஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயற்பாடுகள் தொடர்பான வலுவூட்டல் செயலமர்;வில் சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோவில் கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் கற்பிக்கும் சுமார் 55 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களும் கலந்துகொண்டனர்.
இச் செயலமர்வில் வளவாளராக பேராசிரியர் மா.சின்னத்தம்பி அவர்கள் கலந்துகொண்டதுடன் இச்செயலமர்வின் இணைப்பாளர்களாக கிழக்குமாகாணக் கல்வித்திணைக் களத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் சா.அரிதரன் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் அ.கில்பட்அருள்தாஸ் ஆகியோர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.