பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் மரநடுகை நிகழ்வு

(இ.சுதாகரன்)

கல்வி அமைச்சினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள விசேட சுற்று நிருபங்களுக்கு அமைவாக பயன் தரு மரங்களை பாடசாலை வளாகத்தினுள் நடுவோம்.

எனும் செயற்றிட்டத்திற்கு அமைவாக பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட உதயுபுரம் தமிழ் வித்தியாலயம் ஏற்பாடு செய்த மரம் நடுவோம். சூழலைப் பாது காப்போம்.எனும் கருப்  பொருளில் மரநடுகை நிகழ்வு நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.

இதில் பாடசாலை அதிபர் சி பேரின்பராசா மற்றும் ஆசிரியர்கள் இமாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலை வளாகத்தினுள் ஒரு மாணவருக்கு ஓர் மரம் என்ற அடிப்படையில் சுமார் முன்நூற்றி ஐம்பதிற்கு மேற்பட்ட பயன் தரு மரங்கள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.