மூவாயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!

நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு அதிகமாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்று     (வியாழக்கிழமை) இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அதிபர்களிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் கடமையாற்றிய தேசிய பாடசாலை ஆசிரியர்கள் சுமார் 12 ஆயிரம் பேர் உள்ளதாகவும், முதல் கட்டமாக உயர் தரத்தில் கற்பிக்கும் 3 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று இடமாற்றப்படவுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.