தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை: மஹிந்த

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தோ்தால்கள் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், தெஹிவளை விஷ்ணு கோயிலுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


” எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து நாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை. அரசாங்கத்தின் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் எமக்குப் பூரண திருப்தியில்லை.

எமது வேட்பாளர்கள் மற்றும் கட்சி குறித்த தீர்மானங்கள் விரைவில் எடுக்கப்படவிருக்கின்றன. அதன்பின்னரே இவை குறித்து எம்மால் தீர்மானமாகக் கூறமுடியும்” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்