தமிழ்த் தினப் போட்டியில் பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலய மாணவி மூன்றாம் இடம்

(இ.சுதாகரன்)

தேசிய ரீதியாக நடைபெற்ற தமிழ் மொழி தினப் போட்டியின் பேச்சுப் போட்டியில் மூன்றாம் இடத்தினைப் பெற்று பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின்  வரலாற்றில் சாதனையினை ஏற்படுத்திய மாணவி ஆ.பிதுர்ஷிக்காவுக்கு பாடசாலையின் அதிபர் சி.பேரின்பராசா சான்றிதழ் வழங்கியும். மாணவியினை போட்டிக்கு நெறிப்படுத்திய ஆசிரியை திருமதி எம்.சசிகரன் அவர்கள் பதக்கம் அணிவித்து கௌரவித்தனர்.

 குறித்த மாணவி. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தது மாத்திரமல்லாது பாடசாலை ரீதியாக நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.