மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய நாவற்காடு நாமகள் வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வுகள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய நாவற்காடு நாமகள் வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வுகள்  11.10.2017 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு கல்லூரி அதிபர்  த. கோபாலபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதிபர், ஆசிரியர்கள். கல்விசாரா ஊழியர்கள் நாவற்காடு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு பாடசாலை பாண்ட் வாத்தியக் குழுவினராலும், மாணவர்களினாலும், கல்லூரிச் சமூகத்தினாலும் மிகவும் கோலாகலமான முறையில் வரவேற்று வரப்பட்டு விழாக்கள் ஆரம்பமாகின.


இவ் ஆசிரியர் தின விழாவில் நாவற்காடு நாமகள் கனிஸ்ட பாடசாலை ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். கலை நிகழ்வுகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவாகள் ஈடுபட்டதை அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. பாடசாலைச் சமூகத்தினால் அதிபர், ஆசிரியர்கள் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.