தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி வாரத்தில், பயிர்கள் நடும் நிகழ்வு.


(துறையூர் தாஸன்)

தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி வாரத்தினை முன்னிட்டு பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி வருமானம் பெறக்கூடிய பயிர்களை நடும் நிகழ்வு,நாவிதன்வெளி பிரதே செயலக வளாகத்தில் பிரதேச செயலக செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் நேற்று  (12) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உணவுப் பெறுமானமுடைய வருமானத்தை ஈட்டக்கூடிய பயிர்களை இதன்போது நட்டு வைத்தார்.

விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், கமநல சேவைகள் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக நிர்வாக திட்டமிடல் உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.