டிசம்பர் 11ஆம் திகதி முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பு மனு!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்குரிய வேட்பு மனுக் கோரல் அறிவிப்பை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிப்புக்கள் வெளியாகியிருக்கும் நிலையில் இதுகுறித்து கலந்துரையாடல் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

இதன்போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தேர்தலுக்குரிய வேட்பு மனுக் கோரல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.