உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி 19 வயது இளைஞன் உயிரிழப்பு

வெருகல் – சந்தலிக்கட்டை ஆற்றுப்பகுதியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்குண்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை  இடம்பெற்றுள்ளதோடு, சம்பவத்தில் பஜிர்வன் என்ற 19 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வயலில் உழவு வேலை செய்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் அகப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் இவ்வாண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பரீட்சை முடிவுகளுக்காக காத்திருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.