பரீட்சைகள் ஆணையாளர் திடீரென கல்வி அமைச்சுக்கு மாற்றம்!

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் தற்போது இடம்பெற்றுவரும் விசாரணைகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சைகள் திணைக்களத்தில் அண்மைக்காலமாக பல மோசடிகள் இடம்பெற்று வருவதாக கூறப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசிய பிரிவின் பிரதானி பதவி நீக்கப்பட்டார்.
இதற்கு பரீட்சைகள் ஆணையாளரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் கல்வி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.