கல்லடியில் போட்டிக்கு மோதிக்கொண்ட இரு வாகனங்கள்

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில், கல்லடி மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தின் முன்பாக வாகன விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.

நேற்றிரவு  இடம்பெற்ற குறித்த விபத்தினால் யாருக்கும் உடற்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தின் முன்பாக, முச்சக்கரவண்டி மற்றும் டொல்பின் ரக சிற்றுந்து ஆகியன விபத்துக்குள்ளாகியுள்ளன.

கல்லடி வேலூர் கொலனி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு செல்வதற்காக முச்சக்கரவண்டி ஒன்று சுற்றுவட்டத்தை கடக்க முற்பட்டுள்ளது. இதன்போது காத்தான்குடி பகுதியிலிருந்து பயணம் செய்த டொல்பின் ரக சிற்றுந்து, குறித்த முச்சக்கரவண்டிக்கு இடம் கொடுக்காமையினால் இரண்டும் மோதிக்கொண்டன.

இதனால் குறித்த இரு வாகனங்களும் சேதத்துக்குள்ளாகியதோடு, அதில் பயணம் செய்த எவருக்குமே சேதங்கள் ஏற்படவில்லை. குறித்த விபத்துத் தொடர்பாக இரு வாகனங்களின் ஓட்டுநர்களிடமும் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.