மட்டக்களப்பில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேர் கைது

(சரவணன் )---
 பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பொலிசாரின் விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடாடிய 36 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

  இவ் விசேட நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 3.00 மணிவரை இடம்பெற்றது இதில் மட்டக்களப்பபு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 19 பேரையும் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 3 பேரையும், வாகரை பொலிஸ் பிரிவில் 4 பேரையும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 5 பேரையும் , கரடியனாறு பொலிஸ் பிரிவில் 2 பேர் உட்பட 36 பேரை கைது செய்துள்ளனர்

 இதில் மதுபோதையில் வாகனம் செலுத்தியோர், நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியவர்கள், கஞ்சாவுடன் மற்றும் சந்தேகத்துக்கு இடமாக நள்ளிரவில் வீதிகளில் நடமாடியவர்கள் உட்பட 36 பேரை கைது செய்துள்ளனர் இதில் கைது செய்யப்பட்டவர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நீதிமன்றத்தில் ஆ}ர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியவர்களை விசாரணையின் பின்னர் பொலிசார் எச்சரித்து விடுதலை செய்வுள்ளதாகவும் அந்தந்த பிரதேச பொலிசார் தெரிவித்தனர் ;