கல்முனையில்; புதிய அரசமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல்.


(சர்.நடனசபேசன்)
புதிய அரசமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டதில் இடம்பெறவுள்ளது.

கல்முனை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள நால்வர் கோட்டம் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுஇ இடைக்கால அறிக்கை பற்றிய தெளிவூட்டல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அரசமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான உண்மைத் தண்மையை அறிந்துகொள்ள அனைவரையும் அழைப்பதாகஇ இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் தெரிவித்தார்.

'அனைத்து அரசியற் பிரமுகர்கள், சமுக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், எனப் பலதரப்பினரும் கலந்துகொண்டு, இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவின்மைகளில் இருந்து விடுபட்டு உண்மை விளக்கம் பெறுவதற்கு இக்கலந்துரையாடல் ஒரு வாய்ப்பாக அமைவதோடு, மற்றையவர்களுக்கும் தெளிவூட்டுவதற்கும் உதவியாக இருக்கும்' எனவும் தெரிவிக்கப்படுகிறது