ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக நூர்தீன் முகம்மது நௌபீஸ் கடமைப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்

(ஏ.எம் றிகாஸ்)

ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக நூர்தீன் முகம்மது நௌபீஸ் (இலங்கை நிருவாக சேவை)  13.11.2017 உத்தியோகபூர்வமாக கடமைப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

ஏறாவூரைச்சேர்ந்த இவர் கடந்த காலங்களில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளராகப் பணியாற்றிவந்தார். இவர் ஏறாவூர்- றகுமானியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் கிழக்குப்பல்கலைக்கழக பட்டதாரியுமாவார்.

ஏறாவூர் உள்ளுராட்சி மன்றத்தின்  செயலாளராக கடந்த ஏழரை வருடங்களாகக் கடமையாற்றிவந்த எம்எச்எம். ஹமீம் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபையின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதையடுத்து புதிய செயலாளர் கடமையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய செயலாளருக்கு பொதுநல அமைப்பபுக்களது பிரதி நிதிகள் நேரடியாகவும் தொலைபேசிமூலமும் வாழ்த்துத்தெரிவித்தனர்.​