தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளார் அலுவலகத்தில் பிரியாவிடை வைபவம்

(M.S.M. சறூக்)

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளார் அலுவலகத்தில் காசாளராக கடமையாற்றிய எஸ்.பி.எம். முஹிசீன்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் அலுவலகத்திக்கு இடமாற்றம் பெற்று செல்வதனால் அவருக்கான பிரியாவிடை வைபவம்     பிராந்திய  முகாமையாளார் பொறியியலாளர் டி.ஏ.பிரகாஷ் தலைமையில் அலுவலக கேட்போர்  கூடத்தில்  2017.11.17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  மாலை 03 மணிக்கு மிக சிறப்பாக இடம் பெற்றது.

அதன் போது இடமாற்றம் பெற்றுச்செல்லும்  காசாளர் எஸ்.பி.எம். முஹிசீன் அவர்களுக்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ.பிரகாஷ், சிரேஷ்ட  பொறியியலாளர் எஸ்.எல். ஹாலிதீன் (இயக்குதல் மற்றும் பராமாரிப்பு) மற்றும் அங்கு கடமையாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும்  கலந்து  சிறப்பித்திருந்தனர்.