கிழக்கு மாகாணத்தில் உடனடி இடமாற்றங்கள்!

கிழக்கு மாகாணத்தில் நகர சபைகள் உட்பட பிரதேச சபைகளின் செயலாளர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார்

கிழக்கு மாகாண ஆளுனரின் பணிப்புரையின் பேரில் திங்கட்கிழமை 13ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.


கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் இவ்விடமாற்றம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்திலும் இவ்விடமாற்றம் நடைபெறவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

குறித்த இடமாற்றங்களின் மூலமாக வினைத்திறன் மிக்க நகர மற்றும் பிரதேச சபைகளாக இவை மாற்றம் பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.